அரசியல்

அனைத்து தடைகளையும் நீக்கியது ஐ.தே.க : மீண்டும் ஒன்றிணையப்போகும் இருபெரும் சக்திகள் ?

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததன் காரணமாக கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளது.

நேற்று (16) மாலை கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் ஏற்படக்கூடிய சட்ட பின்னணியை ஆராய முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையிலான குழுவை நியமிக்கவும் முடிவு செய்துள்ளது.

வஜிர அபேவர்தனவின் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ஐ.தே.க உறுப்பினர்களுக்கு செயற்குழு எடுத்த இந்த நடவடிக்கையின் காரணமாக, அவர்கள் மீண்டும் ஐ.தே.க.வில் இணைந்து பணியாற்றுவதற்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ரணில்  தலைமையில் கூட்டம்

ஐ.தே.க தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிட்டகோட்டே சிறிகொத்தவில் உள்ள ஐ.தே.க தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதிலிருந்து, ஒரு பொதுவான கூட்டணியில் இணைந்து பணியாற்றுவதில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இந்த செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button