
நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் விவசாயிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நெல் களஞ்சியசாலைகளில் உள்ள நெல் விடுவிக்கப்படும்.
நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் போராட்டம் நடத்த தேவையில்லை.
பெரும்போகத்தில் விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்திக்கப்படும் என விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.




