இலங்கைசர்வதேசம்

உறக்கத்திலிருந்த குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் – ஐ.நா கவலை

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் இந்நாட்டின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே குறிப்பிடுகையில், இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த அந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவித்தார்.

 

இது போன்ற வன்செயல்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.

 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், அவ்வீட்டில் இருந்த இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

தாக்குதலைத் நடத்துவதற்காகச் சந்தேக நபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, கீழ் போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதிலும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

 

இதனிடையே, இந்தக் குண்டுத் தாக்குதல் இலக்கு மாறித் தாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

தாக்குதலுக்கு இலக்காகித் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், உயிரிழந்த இரு குழந்தைகளின் தந்தையின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே குறித்த குண்டுத் தாக்குதலை நடத்தக் குற்றவாளிகள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதன் காரணமாகவே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

சம்பவத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்கள் இன்று (12) பிற்பகலில் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டதாக அதிகாலை அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button