உலகம்சுவிஸ்

செப்டம்பர் 1 முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

தரவு பாதுகாப்பு: பெர்ன் மண்டலத்தில் திருத்தப்பட்ட மண்டல தரவு பாதுகாப்புச் சட்டம் 2026 செப்டம்பர் முதல் அமுலுக்கு வருகிறது. இதன் மூலம் பெர்ன் மண்டலத்தில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட நகராட்சிகளும், நகராட்சி சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகளும் மண்டல தரவு பாதுகாப்பு அதிகார சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.

எனினும், பெர்ன், பீல்/பியென், கொனிஸ் மற்றும் துன் ஆகிய நான்கு பெரிய நகராட்சிகள் தங்களுக்கென தனியான தரவு பாதுகாப்பு அலுவலகங்களை தொடர்ந்து கொண்டிருக்கும்.

சம்பளம்: பாசல்-சிட்டி மண்டலத்தில், மண்டல அரசுப் பணியாளர்களுக்கான சம்பள நடவடிக்கைகள் அடங்கிய தொகுப்பு செப்டம்பர் 1 முதல் பெருமளவில் அமுல்படுத்தப்படுகிறது.

இந்தத் தொகுப்பில், குறிப்பாக ஆரம்ப சம்பள உயர்வு, மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கான சம்பள நடவடிக்கைகள் மற்றும் நிதி கொடுப்பனவுகளின் அதிகரிப்பு ஆகியவை அடங்குகின்றன.

அனைத்து சம்பளத் தரங்களுக்குமான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் மாற்றம் 2027 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும்.

இந்த சம்பளத் தொகுப்பின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 18 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (சுமார் 22.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவாகும். இதனுடன் ஒருமுறை செலவாக 4.3 மில்லியன் சுவிஸ் பிராங்குகள்ஒதுக்கப்படுகின்றன.

மண்டல நாடாளுமன்றம் மே மாதம் நடைபெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் இதற்கான நிதியையும், தொடர்புடைய சட்டத் திருத்தங்களையும் அங்கீகரித்தது.

இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் இந்த மசோதா குறித்து விவாதித்த நாடாளுமன்றம், மேலும் விரிவான சம்பளத் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், ஒரு வாக்கு கணக்கில் சேர்க்கப்படாததால் அந்த வாக்கெடுப்பு மீண்டும் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button