
தமிழ் மக்கள் மற்றும் தமிழில் இனம் என்று பேசுபவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவிப்பது போல கச்சத்தீவை (இந்தியாவிடம்) ஒப்படைத்துவிடுமாறு கூறுவதை இலங்கை நாட்டின் பிரஜைகளால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷெரிப் தெரிவித்தார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சத்தீவை இந்தியாவுக்குக் கொடுத்துவிட்டால் யாழ்ப்பாணத்தில் வாழும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்
எனவே, கச்சத்தீவைத் தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயநலமின்றிச் சிந்தித்து நாட்டின் நன்மை கருதிப் பேச வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷெரிப்வலியுறுத்தினார்.
.





