
ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பதற்கான எல்லையை எட்டவில்லை என்றாலும், உள்நாட்டிலும் அண்டை நாடுகளிலும் இதன் பாதிப்பு ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




