
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் முன்றாம் கட்ட அகழ்வின் இன்றைய ஐந்தாம் நாளில், மூன்று மனித எச்சகங்கள் வெளிப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், இன்றைய அகழ்வுடன் மொத்தமாக 244 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





