இலங்கை

புத்தாண்டு வாரத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு: 29,000 பேர் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தகவல்!

புத்தாண்டு வாரத்தில் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்தநிலையில், விபத்துகளை தடுப்பதில் தொடர்பில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதற்கிடையில் நாடளாவிய ரீதியில் அண்மை காலங்களில் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக சுமார் 29 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவின் விபத்துத் தடுப்புப் பிரிவின் சமூக நல மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

 

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 இலட்சம் பேர் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன், அவர்களில் பெரும்பான்மையானோர் புத்தாண்டு காலங்களிலேயே அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்துடன் ஒப்பிடுகையில், மற்ற மாகாணங்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதாகவும் சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button