
ஏற்றுக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாகவும், தாக்குதல்களை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் மீதான பேரழிவுத் தாக்குதலை இன்று இரவு நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிரம்ப் தனது பதிவில், ‘ஈரான் நாடு’ என்பதற்கு மாற்றாக ‘ஈரானிய இஸ்லாமியக் குடியரசு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹார்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டதாகவும், இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாக அமையும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இராணுவ இலக்குகளையும் நாம் அடைந்து, அவற்றை விடுத்துச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதோடு, மத்திய கிழக்கில் அமைதிக்கு வழிவகுக்கும் ஈரானுடனான நீண்டகால அமைதி குறித்த தெளிவான உடன்படிக்கையை நோக்கி வெகுதூரம் முன்னேறியுள்ளோம் என்பதே இந்த முடிவிற்கான காரணம் என்று டிரம்ப் சுட்டிக்காட்டிள்ளார்.
ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவு தமக்குக் கிடைத்ததாகவும், அதனைப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியமான அடிப்படையாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தின் சர்ச்சைக்குரிய அம்சங்கள் அனைத்திலும் அமெரிக்காவும் ஈரானும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டன, ஆனால் அந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து முடிக்க இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற முறையிலும், மத்திய கிழக்கு நாடுகளின் சார்பாகவும், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்சினையைத் தீர்வு காணும் நிலைக்குக் கொண்டு வந்திருப்பது தனக்கு பெருமையாகும் என டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மக்கள் திரண்டிருந்த நிலையில், ஈரானிய அரச தொலைக்காட்சி அமெரிக்காவுடனான போர் நிறுத்தத்தை வெற்றியாகக் காட்டி அறிவித்துள்ளது.
அந்த ஒளிபரப்பில், ஆக்கிரமிப்பு செய்யாமை, தடைகளை நீக்குதல் மற்றும் அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது குதாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திவிட்டதாகவும், பேச்சுவார்த்தைகளிலும் இணையும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், போர் நிறுத்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானுக்குப் பொருந்தாது என்றும், லெபனான் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





