இலங்கை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி பதவி நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக செயல்பட்டு வந்த மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதுதான் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும்.

 

குறிப்பாக, ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி முன்வைத்த வரவு – செலவுத் திட்டத்திற்கு அவர் ஆதரவாக வாக்களித்தமை கட்சியின் உள்துறை ஒழுங்கு விதிகளை மீறியதாகக் கருதப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, அவரது மாநகர சபை உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி பியுமி ஆட்டிகல வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button