இலங்கை

கொழும்பு மாநகர முறைகேடுகள், ஊழல்களை அறிவிக்கவும் – பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை கோருகிறது ஆணைக்குழு

இது தொடர்பான ஏதேனும் எழுத்துமூல முறைப்பாடுகள் அல்லது தகவல்களைச் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் ஆணைக்குழுவின் செயலாளருக்கு “இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து முறைப்பாடுகளும் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்தகைய முறைப்பாடுகள் அல்லது தகவல்களை வழங்குபவர்களின் பெயர், முகவரி, தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் ஆகியவை அனைத்துச் சமர்ப்பிப்புகளிலும் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை எனின், அது தொடர்பில் ஆணைக் குழுவிடம் கோர முடியும்.

ஆணைக்குழுவிடம் வாய்மூலச் சமர்ப்பிப்புகளைச் செய்ய விரும்பும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், 011 2 301 735 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button