இலங்கை

செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கைப்பற்றப்பட்டது

கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காகப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ளது.

இந்தப் படகு யாழ்ப்பாணம் அராலி கடற்கரையிலிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் படகு, இஷாரா இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஏ. ஆனந்தனுக்குச் சொந்தமான 400 குதிரைத்திறன் கொண்ட எஞ்சின் படகு என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை ஆய்வாளர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தனிடம் நீண்ட நேரம் முன்னெடுத்த விசாரணையின் அடிப்படையில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button