இலங்கை

நோர்வேயின் புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக தமிழீழ தமிழ் பெண் கம்சி குணரத்னம் நியமனம்!

நோர்வேயின் தொழிலாளர் கட்சி (Labour Party) தலைமையிலான அரசில் இன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில், நாட்டின் புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கம்சி குணரத்னம் (Khamshajiny Gunaratnam) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜான் இவார் நைகார்ட் (Jon Ivar Nygård) அவர்களுக்குப் பதிலாக இவர் இப்பதவியை ஏற்றுள்ளார். இதன் மூலம் நோர்வே அமைச்சரவையில் இடம்பெறும் முதல் தமிழீழத்தின் தமிழ் வம்சாவளி நபர் என்ற வரலாற்றுச் சாதனையை கம்சி படைத்துள்ளார்.

• வரலாற்றுப் பின்னணி: தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்து, தனது 3ஆவது வயதில் குடும்பத்துடன் நோர்வேயில் குடியேறிய கம்சி, தொழிலாளர் கட்சியின் இளைஞரணி மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

• பாராளுமன்ற உறுப்பினர்: நோர்வே பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் பின்னணி கொண்ட உறுப்பினர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

• ஊடகங்களின் கவனிப்பு: கம்சி குணரத்னம் அவர்களிடம் இதுவரை வாகன ஓட்டுநர் உரிமம் (Driving Licence) இல்லை என்பது நோர்வே ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், நோர்வே வரலாற்றில் ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒருவர் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பது இது முதன்முறையல்ல. ஏற்கனவே 1997-இல் அமைச்சராக இருந்த ஒட் எய்னார் டோரம் (Odd Einar Dørum) அவர்களிடமும் ஓட்டுநர் உரிமம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வே அரசியலில் மிக உயர்ந்த பொறுப்பை ஏற்று, புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் நோர்வே மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ள கம்சி குணரத்னம் அவர்களுக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Screenshot
Screenshot
Screenshot
Screenshot
Screenshot
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button