உலகம்

மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

புளூம்பர்க் (Bloomberg) செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 4.25% (4.30 டொலர்) அதிகரித்து 105.51 டொலராக உயர்ந்துள்ளது.

அத்துடன், அமெரிக்காவின் NYMEX WTI ரக மசகு எண்ணெய் விலையும் 4.24% (4.07 டொலர்) அதிகரித்து 100.12 டொலரை எட்டியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button