இலங்கைதமிழீழம்

இலங்கையில் கடும் வெப்பம்: திருகோணமலையில் வெப்பநிலை 40°C-ஐ நெருங்கியது

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 25) கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 39.9°C வெப்பநிலையைப் பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து:

  • பொலன்னறுவை38.6°C
  • முல்லைத்தீவு37.5°C
  • மொனராகலை37.3°C
  • வவுனியா37.1°C

மேலும், பிற பகுதிகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலைகள்:

  • அனுராதபுரம்35.3°C
  • மத்தள34.9°C
  • மகா இல்லுப்பல்லம34.8°C
  • பொத்துவில்34.7°C
  • பதுளை34.4°C

யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் ஆகிய இரு மாவட்டங்களிலும் 34.2°C வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், கொழும்பில் அதிகபட்ச வெப்பநிலை 32°C ஆக இருந்தது.

இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, நுவரெலியாவில் நாட்டிலேயே குறைந்த அதிகபட்ச வெப்பநிலையாக 23.4°C பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பண்டாரவளையில் 29°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த வெப்பநிலை விவரங்கள் 2026 ஜூலை 25 அன்று இலங்கை முழுவதும் பதிவான அதிகபட்ச வெப்பநிலைகளை அடிப்படையாகக் கொண்டவை.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button