
படித்துள்ளதாகவும், அதில் வெளிநாட்டு நன்கொடைகளை தடை செய்யும் எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்றும் உறுதியளித்த அவர், இந்த மர்ம நபரின் தன்னிச்சையான செயலால் நாட்டுக்கு வரவிருந்த பெரும் டொலர் இருப்பு அநியாயமாக இழக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் கனடா மற்றும் சர்வதேச கிளைகளிலிருந்து வரவிருந்த நிதிகளுக்கும், உகாண்டாவில் இருப்பதாகக் கூறப்படும் டொலர்களைக் கொண்டு வர முடியாமல் போனதற்கும் இந்த “IMF உடன்படிக்கையையே” அரசாங்கம் சாக்குப்போக்காகப் பயன்படுத்தப் பார்க்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
எனவே, இந்த மர்ம நபரைக் கண்டறிந்து தண்டனை வழங்குவதோடு, 2024ஆம் ஆண்டு முதல் IMF உடன்படிக்கையைக் காட்டி நாட்டுக்கு அநியாயமாக இழக்கப்பட்ட ஒட்டுமொத்த டொலர் நிதிகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துவதற்காக உடனடியாக “ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை” நியமிக்க வேண்டும் என உதய கம்மன்பில அரசாங்கத்திற்கு அழுத்தம் திருத்தமாக கோரிக்கை விடுத்துள்ளார்.





