
ஈரான் ஒரு அமைதி உடன்படிக்கைக்கு வருவதற்கு “காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அவ்வாறு செய்ய அவர்கள் தவறினால், “அவர்களில் எதுவும் மிஞ்சியிருக்காது” என்று அவர் அச்சுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து ஈரான் முன்வைத்த திட்டத்துக்கு அமெரிக்கா தனது சமீபத்திய பதிலில் எந்தவொரு உண்மையான சலுகைகளையும் வழங்கத் தவறிவிட்டதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-தஃப்ரா பிராந்தியத்தில் அமைந்துள்ள பரக்கா அணுசக்தி நிலையத்திற்கு வெளியே உள்ள மின்சார உற்பத்தி இயந்திரத்தில் ஆளில்லா வானூர்தி தாக்குதல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.





