இந்தியாதமிழ் நாடு

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்: ஆளுநர் மாளிகை முன்பாக பலத்த பாதுகாப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் நோக்கில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயற்படும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தைக் கண்டித்தும், அவர்களின் ஆலோசனையின் படி செயற்படும் ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழக காங்கிரஸ் கட்சியினரால் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் அருகே இன்று முற்பகல் 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 

காங்கிரஸ் கட்சியினர் இன்னும் சற்று நேரத்தில் ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகை முன்பாக பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button