
இன்றைய தினம் (01) எந்தவொரு எரிபொருள் விலை திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 21ஆம் திகதி எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டன. அதன் போது,
முன்னதாக, கடந்த மார்ச் 21ஆம் திகதி எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டன. அதன் போது,
ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 317 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக (81 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 365 ரூபாவிலிருந்து 455 ரூபாவாக (90 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 303 ரூபாவிலிருந்து 382 ரூபாவாக (79 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 365 ரூபாவிலிருந்து 455 ரூபாவாக (90 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 303 ரூபாவிலிருந்து 382 ரூபாவாக (79 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 353 ரூபாவிலிருந்து 443 ரூபாவாக (90 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 195 ரூபாவிலிருந்து 255 ரூபாவாக (60 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டது.





