உலகம்

ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயாராகி வருவதாக தகவல்

ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக ‘வொஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

இது பல வாரங்களாக நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அமையுமென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போர்த் திட்டங்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்தினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது அனுமதியை வழங்குவாரா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது

 

இதற்கு முன்னர் , சுமார் 4,000 மெரைன் படைவீரர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

அமெரிக்காவின் 82ஆவது வான்வழிப் படையின் பாரசூட் படைவீரர்களும் இந்த இராணுவ நடவடிக்கைக்குத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button