
உறுதிப்படுத்தியது.
டிரம்ப் மற்றும் முனீர் இடையேயான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் அவசரத் தேவை குறித்து இருவரும் ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்தது.
டிரம்பின் மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இஸ்லாமாபாத் செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால், அமெரிக்கத் தரப்பில் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் முன்மொழியப்படுவதாக பாகிஸ்தானிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், ஈரான் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தையில் யார் பங்கேற்பார் என்பது குறித்து எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அவர்களே பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.





