உலகம்

ஈரான் தாக்கப்படாமல் இருந்திருந்தால் மூன்றாம் உலகப் போர் வெடித்திருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்காமல் இருந்திருந்தால், அணு ஆயுதப் போர் மூண்டு அது மூன்றாம் உலகப் போராக மாறியிருக்கக்கூடும் என்று கூறி, ஈரானுக்கு எதிரான தற்போதைய போரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

 

ஓவல் அலுவலகத்திலிருந்து பேசிய டிரம்ப், இந்த இராணுவ நடவடிக்கை ஒரு விருப்பத் தேர்வு அல்ல, மாறாக ஒரு அவசியமான நடவடிக்கை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், நாம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழித்திருக்காவிட்டால், ஈரான் ஒரு மாதத்திற்குள் அணு ஆயுதத்தைப் பெற்று, அதை இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் எதிராகப் பயன்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இது எதையும் விட்டுவைக்காத ஒரு போராக இருந்திருக்கும் என்றும், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததன் மூலம் அமெரிக்கா ஒரு சிறந்த பணியைச் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

அணு ஆயுதம் ஏந்திய ஈரானை ஆதரிப்பவர்கள் எவராலும் பிரச்சனை உண்டு என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஈரானிடம் தற்போது கடற்படை, விமானப்படை, வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தலைமைத்துவம் எதுவும் இல்லை என்ற கூற்றை டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிடுகையில் அவர், “எனது மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், நாம் யாரிடம் பேசுகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை.

 

ஏனென்றால், அவர்களில் ஒருவரையும் யாருக்கும் தெரியாது; அவர்கள் (ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள்) அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றார்.

 

ஒபாமா கால அணுசக்தி ஒப்பந்தம் ஈரானை அணு ஆயுதம் தயாரிப்பதற்கு மேலும் நெருக்கமாக்கியுள்ளது என்று கூறி, டிரம்ப் அதனை விமர்சித்தார்.

 

அவரது கூற்றுப்படி, நான் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகாமல் இருந்திருந்தால், ஈரான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கும், மேலும் முதலில் இஸ்ரேலையும் பின்னர் அமெரிக்காவையும் குறிவைத்திருக்கும் என்றார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button