தமிழீழம்

மன்னாரிலிருந்து வருகை தந்தோர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டம்!

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்று வருகிறது.

“நமது நாடு, நமது மன்னார், நமது போராட்டத்தின் கோரிக்கைகள்” என்ற பதாகையில்

மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு இடத்திலும் கனிம மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது,

அமைக்கப்பட்ட ( தம்பபன்னி, நறுவிலிக்குளம் ) ஆகிய 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தை மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button