இலங்கை

மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆடுகள் பழமையான கல்வேட்டு

சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டு, பாறை குகையின் சுவரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இது கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
அக்காலத்தில் தமிழர்கள் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்ததற்கும், அங்கு தங்களது பெயர் மற்றும் தானங்கள் பற்றிய பதிவுகளைச் செய்ததற்கும் இது மறுக்க முடியாத ஆதாரமாகும்.
தமிழ் பிராமி எழுத்துக்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் பயன்படுத்தப்பட்ட பிராமி எழுத்தின் தமிழ் வடிவம் ஆகும்.
பெரும்பாலும், அக்காலத்தில் சமணர்கள் மற்றும் புத்த பிக்குகள் தங்கியிருந்த குகைகளில், இவர்களின் பெயர்கள் மற்றும் தான விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு கண்டுபிடிப்பு, இலங்கையில் தமிழர் நாகரிகம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலைத்திருந்ததை உறுதிப்படுத்துகிறது.
வரலாற்று ஆய்வாளர்கள் இதை, தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தின் பெருமையை வெளிப்படுத்தும் முக்கியமான கண்டுபிடிப்பாகக் குறிப்பிடுகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button