
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணியும் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா:
கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (அணித்தலைவர்), ரிஷப் பண்ட் , துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, சரண்ஷ் ஜெயின், மானவ் சுதர், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இலங்கை:
லஹிரு உதார, கமில மிஷார, பசிந்து சூரியபண்டார, கமிந்து மெந்திஸ், தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), சோனல் தினுஷ, நிரோஷன் திக்வெல்ல , கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்ய, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ.
முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





