
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது பல்வேறு தரப்புக்களை சந்தித்து சமகால விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்
அந்தவகையில் ஓய்வு பெறவிருக்கும் , யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்நம்பி, மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினர்.








