சுவிஸ்

“வெளிநாடுகளின் மோதலில் தலையிடக்கூடாது” சுவிட்சர்லாந்தில் புதிய அரசியல் மோதல் வெடிப்பு!

சுவிட்சர்லாந்தில் ஆகஸ்ட் 1 தேசிய தினத்துடன் அரசியல் களமும் மீண்டும் சூடுபிடித்துள்ளது!

முன்னாள் கூட்டாட்சி மன்ற உறுப்பினரும் SVP-யின் முக்கிய தலைவருமான கிறிஸ்டோஃப் ப்ளோச்சர் முன்னெடுத்து வரும் நடுநிலைமை முன்முயற்சிக்கான பிரச்சாரம் இன்று தீவிரமடைந்துள்ளது.

சுவிட்சர்லாந்து தனது “நிரந்தரமான மற்றும் ஆயுதமேந்திய நடுநிலைமையை” அரசியலமைப்பில் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வெளிநாடுகளின் மோதல்களில் சுவிட்சர்லாந்து தலையிடக்கூடாது என்றும் இந்த முன்னெடுப்பு கோருகிறது.

இன்டர்லேக்கன் அருகே நடைபெற்ற தேசிய தின நிகழ்வில் உரையாற்றிய ப்ளோச்சர், நடுநிலைமைதான் சுவிட்சர்லாந்தின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பை பாதுகாக்கும் என வலியுறுத்தினார்.

ஆனால், இந்த முயற்சிக்கு எதிராகவும் கடுமையான பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது.

SVP தலைவர்கள் உரையாற்றும் பகுதிகளில் கூட, எதிர்ப்பாளர்கள் “வேண்டாம்” என்ற வாசகங்களுடன் விளம்பரப் பலகைகளை ஒட்டி வருகின்றனர்.

மேலும், SP உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த முயற்சி ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டுகின்றன.

உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் சுவிட்சர்லாந்து ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய தடைகளில் இணைந்த நிலையில், இந்த நடுநிலைமை விவகாரம் தற்போது நாட்டில் மிகப்பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

செப்டம்பர் 27-ஆம் தேதி சுவிஸ் மக்கள் இந்த முக்கியமான முன்முயற்சி குறித்து வாக்களிக்க உள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button