
நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளதுடன் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஜூன் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பதிவான மொத்த டெங்கு நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இறப்பு விகிதம் 0.06% ஆக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜூன் மாதத்தில் திடீர் உயர்வு
இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 51,049 டெங்கு வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்புகளில் 17,208 வழக்குகள் ஜூன் மாதத்தில் மட்டுமே பதிவாகியுள்ளன.
இந்நிலையில், அதிகம் பாதிப்புள்ள மாகாணங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகள்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்படி, நாட்டின் மேற்கு மாகாணம்
தெற்கு மாகாணம் ,சபரகமுவ மாகாணம்
மத்திய மாகாணம்,மற்றும் கிழக்கு மாகாணம் போன்ற மாகாணங்களில்
அதிகளவிலான டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், நாடு முழுவதிலும் உள்ள 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக தற்போது அடையாளம் காணப்பட்டு, தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழைக்காலம் தொடர்ந்து நீடிப்பதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புற தூய்மையைப் பேணி, நீர் தேங்கும் இடங்களை அழிப்பதன் மூலம் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்





