
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், நியாயமான காரணங்கள் இன்றி தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு (writ petition) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் பலரது பெயர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.





