
ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அதனை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி, சீத்தாவக்க, தொம்பே, பியகம, கடுவெல, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப்பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குரிய அபாயம் காணப்படுகிறது.





