
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான விற்பனை கடைகளை 2 வாரத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மது விற்பனை மூலம் ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள போதிலும் இதனால் பல குடும்பங்கள் பாதிக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடிப்படையாக கொண்டே மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், பேருந்து நிலையத்திற்கு 500 மீட்டர் எல்லைக்குள் உள்ள 717 மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.





