உலகம்

ஈரான் போரால் பிரித்தானியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம்

இந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளதாரம் மந்த நிலையை நெருங்கும் எனவும், சுமார் 250,000 பேர் வேலை இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் இந்த நிலை உருவாகும் என சுயாதீன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

ஹார்மூஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

 

எரிபொருள் விலை அதிகரிப்பால் எதிர்வரும் மாதங்களில் விநியோகச் சங்கிலிகள் முழுவதும் பாதிப்படைந்து, வாங்கும் திறனைப் பெருமளவில் பாதிக்கும் என்று தி ஐட்டம் கிளப் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சி வெறும் 0.7 வீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு எட்டப்பட்ட நிலையற்ற 1.4 வீத வளர்ச்சியில் பாதியாகும்.

 

மேலும், வேலைவாய்ப்புச் சந்தையானது கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, வேலையின்மை விகிதம் தற்போதைய 5.2 வீத நிலையில் இருந்து அடுத்த ஆண்டுக்குள் 5.8 வீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

உயர்ந்துவரும் எரிசக்திச் செலவுகளும், விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகளும், இந்த ஆண்டின் மத்தியில் ஐக்கிய ராச்சியத்தை ஒரு தொழில்நுட்பப் பொருளாதார மந்தநிலையின் விளிம்பிற்குத் தள்ளும் என ஐட்டம் கிளப்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான மாட் ஸ்வானெல் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button