
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள நாடளாவிய ரீதியிலான பணிப்புறக்கணிப்பு இன்றும் (10) தொடர்கிறது.
மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சிக் கால நியமனங்களை (Internship Appointments) வழங்குவதில் சுகாதார அமைச்சு எட்டப்பட்ட உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தி இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
பணிப்புறக்கணிப்பை மேலும் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக, சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு இன்று (10) முற்பகல் கூடவுள்ளது. இச்சந்திப்பின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





