
மத்திய கிழக்கில் எரியும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் முதல்… பச்சிளம் குழந்தை மீதான ராணுவச் சித்திரவதை வரை !
மனிதாபிமானம் மரணிக்கும் போர்க்களத்தின் கோர முகங்கள் ‘போரின் விளிம்பில் உலகம்’ – விசேட ஆய்வுத் தொகுப்பு
உலக நாடுகளின் பார்வை இங்கே பெரும் முரண்பாட்டைக் கொண்டுள்ளது. ஈரானின் தாக்குதல்களைக் கண்டிக்கும் கத்தார் போன்ற நாடுகள், ஒருபுறம் குடிநீர் ஆலைகள் மீதான தாக்குதலை மனித உரிமை மீறல் என்கின்றன. மறுபுறம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் பாஸ்பரஸ் பயன்பாட்டை “தற்காப்பு” என்று கூறி மௌனம் காக்கின்றன. இருப்பினும், தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்திற்கு (ICJ) கொண்டு செல்ல வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
நவீன ஆயுதங்கள் ஒருபுறம், பச்சிளம் குழந்தைகள் மீதான வன்முறை மறுபுறம் என மத்திய கிழக்கு ஒரு இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. போர் என்பது வெறும் அதிகார மோதல் மட்டுமல்ல, அது ஒரு நிலத்தின் எதிர்காலத்தையே கருக்கிப் போடும் கொடூரம் என்பதற்கு லெபனான் இன்று ஒரு சாட்சியாக மாறியுள்ளது.





