
இலங்கையின் தெற்கு கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களை விசாரிக்க ஏழு நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் பல நாள் மீன்பிடி இழுவைப்படகில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதன்போது கப்பலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 103 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தக் குழு சுமார் 20 நாட்களுக்கு முன்பு காலி மீன்வளத் துறைமுகத்தில் இருந்து பயணம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.





