
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணக் கொடுப்பனவுகள் தொடர்பான சமீபத்திய தகவல்களை அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
ஆரம்ப நிவாரணக் கொடுப்பனவு: 4,220,047 நபர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ஆரம்ப நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சமையலறை உபகரணங்களுக்கான மானியம்: சமையலறை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட தலா ரூ.50,000 மானியம் இதுவரை 100,946 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான கற்றல் உபகரணக் கொடுப்பனவு: மாணவர்களின் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் ரூ.15,000 கொடுப்பனவு இதுவரை 136,828 மாணவர்களுக்குப் செலுத்தப்பட்டுள்ளது.





