இலங்கை

“தமிழ் பயன்பாட்டிற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் – வரலாற்றை உருவாக்கிய நிகழ்வுகள்!”

1958
தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

1806
பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1816
பிரான்சிஸ் ரொனால்டு கண்டுபிடித்த முதலாவது இயங்கக்கூடிய மின்சாரத் தந்தியை பிரித்தானிய அரசு ஏற்க மறுத்தது. பழைய அணுகல் குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது.

1824
சமோசு நகரில் இடம்பெற்ற சமரில் கிரேக்கக் கடற்படையினர் உதுமானிய, எகிப்தியக் கடற்படையினரைத் தோற்கடித்தனர்.

1860
சுவீடன் மன்னர் பதினைந்தாம் சார்லசு நோர்வே மன்னராக முடிசூடினார்.

1861
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சவுக்கடித் தண்டனையை இல்லாதொழித்தது.

1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: போர் முயற்சிகளுக்கு நிதி திரட்டும் முகமாக அமெரிக்கக் கூட்டரசு முதல் தடவையாக வருமான வரியை அறவிட்டது. $800 இற்கும் அதிகமான வருமானங்களுக்கு 3% வரி அறவிட்டது, 1872 இல் இவ்வரிவிதிப்பு நிறுத்தப்பட்டது.

1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1874
ஜப்பான் அஞ்சல் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்தது.

1884
விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1906
ஈரானில் அரசியல் சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார்.

1914
முதலாம் உலகப் போர்: ஜேர்மனியின் கோனிஜொன் லூயிசு என்ற கப்பல் பிரித்தானியப் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1914
முதலாவது மின்சார சைகை விளக்கு அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது.

1916
முதலாம் உலகப் போர்: உரோமானி சமரில், கூட்டுப் படைகள் உதுமானியர்களின் தாக்குதலை முறியடித்து, சுயஸ் கால்வாயைத் தம்வசப்படுத்தினர்.

1926
அங்கேரிய மாயக்கலை வல்லுநர் ஆரி உடீனி 91 நிமிடங்கள் நீருக்கடியில் மூடிய தாங்கி ஒன்றில் இருந்து சாதனை புரிந்தார்.

1940
இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் லாத்வியாவைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டது.

1944
இரண்டாம் உலகப் போர்: போலந்து தீவிரவாதிகள் வார்சாவாவில் நாட்சி ஜெர்மனியின் வதை முகாமைத் தாக்கி 348 யூத சிறைக் கைதிகளை விடுவித்தனர்.

1944
இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 1,104 சப்பானியப் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் சென்றனர், இவர்களில் பலர் பின்னர் கொல்லப்பட்டோ, தற்கொலை செய்தோ மாண்டனர்.

1949
எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர், 50 நகரங்கள் அழிந்தன.

1960
புர்க்கினா பாசோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962
தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962
அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டார்.

1963
பனிப்போர்: அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

1965
பாகிஸ்தானியப் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் புகுந்தனர். இந்திய – பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.

1971
முதலாவது பசிபிக் தீவுகளின் மாநாடு நியூசிலாந்து, வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.

1973
சோவியத் ஒன்றியம் மார்ஸ் 6 விண்கலத்தை ஏவியது.

1979
ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.

1981
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 11,359 விமானப் போக்குவரத்துக் கட்டுப்படுத்துனர்களை அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் பணியில் இருந்து நீக்கினார்.

1984
வங்காளதேசம், டாக்கா நகரில் வங்கதேச வானூர்தி ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் உயிரிழந்தனர்.

1989
நிக்கராகுவாவில் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி பெரும் வெற்றி பெற்

1958
தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

1806
பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1816
பிரான்சிஸ் ரொனால்டு கண்டுபிடித்த முதலாவது இயங்கக்கூடிய மின்சாரத் தந்தியை பிரித்தானிய அரசு ஏற்க மறுத்தது. பழைய அணுகல் குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது.

1824
சமோசு நகரில் இடம்பெற்ற சமரில் கிரேக்கக் கடற்படையினர் உதுமானிய, எகிப்தியக் கடற்படையினரைத் தோற்கடித்தனர்.

1860
சுவீடன் மன்னர் பதினைந்தாம் சார்லசு நோர்வே மன்னராக முடிசூடினார்.

1861
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சவுக்கடித் தண்டனையை இல்லாதொழித்தது.

1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: போர் முயற்சிகளுக்கு நிதி திரட்டும் முகமாக அமெரிக்கக் கூட்டரசு முதல் தடவையாக வருமான வரியை அறவிட்டது. $800 இற்கும் அதிகமான வருமானங்களுக்கு 3% வரி அறவிட்டது, 1872 இல் இவ்வரிவிதிப்பு நிறுத்தப்பட்டது.

1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1874
ஜப்பான் அஞ்சல் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்தது.

1884
விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1906
ஈரானில் அரசியல் சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார்.

1914
முதலாம் உலகப் போர்: ஜேர்மனியின் கோனிஜொன் லூயிசு என்ற கப்பல் பிரித்தானியப் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1914
முதலாவது மின்சார சைகை விளக்கு அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது.

1916
முதலாம் உலகப் போர்: உரோமானி சமரில், கூட்டுப் படைகள் உதுமானியர்களின் தாக்குதலை முறியடித்து, சுயஸ் கால்வாயைத் தம்வசப்படுத்தினர்.

1926
அங்கேரிய மாயக்கலை வல்லுநர் ஆரி உடீனி 91 நிமிடங்கள் நீருக்கடியில் மூடிய தாங்கி ஒன்றில் இருந்து சாதனை புரிந்தார்.

1940
இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் லாத்வியாவைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டது.

1944
இரண்டாம் உலகப் போர்: போலந்து தீவிரவாதிகள் வார்சாவாவில் நாட்சி ஜெர்மனியின் வதை முகாமைத் தாக்கி 348 யூத சிறைக் கைதிகளை விடுவித்தனர்.

1944
இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 1,104 சப்பானியப் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் சென்றனர், இவர்களில் பலர் பின்னர் கொல்லப்பட்டோ, தற்கொலை செய்தோ மாண்டனர்.

1949
எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர், 50 நகரங்கள் அழிந்தன.

1960
புர்க்கினா பாசோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962
தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962
அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டார்.

1963
பனிப்போர்: அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

1965
பாகிஸ்தானியப் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் புகுந்தனர். இந்திய – பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.

1971
முதலாவது பசிபிக் தீவுகளின் மாநாடு நியூசிலாந்து, வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.

1973
சோவியத் ஒன்றியம் மார்ஸ் 6 விண்கலத்தை ஏவியது.

1979
ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.

1981
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 11,359 விமானப் போக்குவரத்துக் கட்டுப்படுத்துனர்களை அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் பணியில் இருந்து நீக்கினார்.

1984
வங்காளதேசம், டாக்கா நகரில் வங்கதேச வானூர்தி ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் உயிரிழந்தனர்.

1989
நிக்கராகுவாவில் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி பெரும் வெற்றி பெற்றது.

1995
யுகோசுலாவியப் போர்கள்: குரோவாசியாவில் செர்பியர்களின் முக்கிய நகரமான கினினை குரோவாசியப் படைகள் கைப்பற்றினர். இந்நாள் குரோவாசியாவில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2003
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2010
சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 33 தொழிலாளர்கள் 69 நாட்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

2010
ஆப்கானித்தான், படாக்சான் மாகாணத்தில் பன்னாட்டு நிவாரணப் பணியாளர்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2012
அமெரிக்கா, விஸ்கொன்சின் மாநிலத்தில் சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.

1995
யுகோசுலாவியப் போர்கள்: குரோவாசியாவில் செர்பியர்களின் முக்கிய நகரமான கினினை குரோவாசியப் படைகள் கைப்பற்றினர். இந்நாள் குரோவாசியாவில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2003
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2010
சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 33 தொழிலாளர்கள் 69 நாட்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

2010
ஆப்கானித்தான், படாக்சான் மாகாணத்தில் பன்னாட்டு நிவாரணப் பணியாளர்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2012
அமெரிக்கா, விஸ்கொன்சின் மாநிலத்தில் சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்

 

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button