உலகம்

மன்னர் 5-ஆம் ஹரால்டின் இறுதிப் பயணம்: 3,500 ராணுவ வீரர்களின் கம்பீர மரியாதையுடன் தலை நகரில் நெகிழ்ச்சியான அஞ்சலி!

ஒஸ்லோ (நோர்வே):

நோர்வே நாட்டின் மன்னர் 5-ஆம் ஹரால்ட் (King Harald V) அவர்களின் இறுதி ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் மிகக் கம்பீரமாகவும் ராணுவ மரியாதையுடனும் நடைபெற்று வருகின்றன.

மன்னரின் இறுதி ஊர்வலம் கடந்து செல்லும் முதன்மைச் சாலையான ‘கார்ல் ஜோஹன்ஸ்’ (Karl Johans gate) வீதியின் இருபுறமும் சுமார் 1,900 ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று தங்களின் பேரரசருக்கு இறுதி மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.

பன்னாட்டுப் படைகளின் பங்கேற்பு:

நோர்வே நாட்டின் முப்படை வீரர்களுடன் இணைந்து, அண்டை நாடுகளான சுவீடன், டென்மார்க் மற்றும் பிரித்தானியா (UK) ஆகிய நாடுகளின் சிறப்புப் படைப்பிரிவினரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

இவ்வீரர்களுடன் சேர்த்து, ஒட்டுமொத்தமாக சுமார் 3,500 ராணுவ வீரர்கள் மன்னரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வணக்கம் செலுத்துவதாக நோர்வே ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நோர்வே மக்கள் தங்கள் அன்பிற்குரிய அரசருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தலைநகர் ஒஸ்லோவே சோகத்தில் மூழ்கியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button