உலகம்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 5 பேர் உயிரிழப்பு

பெருவின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டரில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 300 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு 9:24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் மையப்புள்ளி ஹுவான்காயோ மாகாணத்தில் உள்ள சிகாயா நகருக்கு மேற்கே-தென்மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று பெருவின் தேசிய குடிமை பாதுகாப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்ளூர் தேவாலயம் மற்றும் கன்னியர் மடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கட்டமைப்பு சேதமடைந்தன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button