இந்தியாஇலங்கை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்- தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (19) மாலை, தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மரியாதையின் நிமித்தம் சந்தித்து, சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் கள நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து, விரைவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு வருகை தர எண்ணியுள்ளமை குறித்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துரைத்தார்.

 

 

 

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின்போது, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், அதன் தென்காசி மாவட்டச் செயலாளர் சையது பட்டாணி, எம்.எஸ்.எப். மாநிலச் செயலாளர் ஷபீக் அஹமது மற்றும் “மணிச்சுடர்” நாளிதழின் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button