இலங்கை

சுவிடற்சர்லாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது வல்லாட்டப் போட்டி இன்று கோலாகலமாகத் தொடக்கம்!

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் (Tamil Education Service Switzerland) ஏற்பாட்டில், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் நடத்தப்படும் “1 ஆவது வல்லாட்டப் போட்டி” இன்று சனிக்கிழமை (30.05.2026) காலை 09:00 மணிக்கு ஸ்டைன்மோரில் உள்ள தமிழ்மனையில் (Gewerbestrasse 4, 8162 Steinmaur) மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

மாலை 17:00 மணி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான தமிழ் மாணவ, மாணவிகளும், சதுரங்க ஆர்வலர்களும் ஆவலோடு கலந்துகொண்டுள்ளனர்.

போட்டியின் சிறப்பம்சங்கள்:

• சுற்றுகள்: ‘Rapid Swiss System’ முறையில் மொத்தம் 7 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வீரருக்கும் 20 நிமிடங்கள் மற்றும் ஒரு நகர்த்தலுக்கு மேலதிகமாக 5 வினாடிகள் (20 min + 05 s) வழங்கப்படுகின்றன.

• பிரிவுகள்: 15 வயதுக்குக் கீழ், 18 வயதுக்குக் கீழ் மற்றும் 18 வயதுக்கு மேல் என மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

• பரிசுகள்: திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் 10, 13, 15, 18 வயதுக்குட்பட்ட பிரிவுகளிலும் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவிலும் சிறப்புப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நிறுவனத்தின் இந்த அரிய முயற்சி, இளைய தலைமுறையினரின் சிந்தனைத் திறனையும் திட்டமிடும் ஆற்றலையும் வளர்ப்பதற்கு ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் சுவிஸ் தமிழர் தகவல் மையத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

#வல்லாட்டப்போட்டி2026 #சதுரங்கம் #தமிழ்கல்விச்சேவை #சுவிற்சர்லாந்து #தமிழ்மனை #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #SwissTamil #SwissTamilInfo #ChessTournament #TamilEducationService #SwissTamilChess #FirstChessTournament #Steinmaur #BrainGame #TamilSport

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button