
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” எனும் கண்காட்சி இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் இன அழிப்பின் வரலாற்றையும் தமிழர்கள் எதிர்கொண்ட வலிகளையும் வளரிளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியில் புகைப்படங்கள், ஆவணங்கள், நினைவுப்பொருட்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் தொடர்பான பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். இக்கண்காட்சி தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுவதுடன் அனைவருக்கும் அனுமதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

#Mullivaikkal #JaffnaUniversity #Tamil #SwissTamilInfo #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #நினைவாயுதம் #மே18 #Mullivaikkal #UniversityOfJaffna #USU #LestWeForget #TamilGenocideMemorial
மேலதிக விபரம்கள்: https://www.facebook.com/share/1AK5kMQqin/?mibextid=wwXIfr





