
2026 ஆம் ஆண்டில் இதுவரை 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், டெங்கு நோயால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகிய பகுதிகளில் இருந்தே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது





