இலங்கை

இலங்கையில் மீண்டும் உயர்கிறதா எரிபொருள் விலை? வெளியான முக்கிய அறிவிப்பு

எரிபொருள் விலைகளைத் தீர்மானிக்கும் தற்போதைய நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அனுமதி வழங்கத் தவறினால், எரிபொருள் விலைகளை மேலும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால இது குறித்துத் தெரிவிக்கையில், மே மாதம் 1 ஆம் திகதி வரை டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாவையும், பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவையும் அரசாங்கம் மானியமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

 

இந்த மானியத்தைத் தொடர வேண்டுமானால், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்க வேண்டும்.

 

அத்துடன் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலும் இதில் தாக்கம் செலுத்தும்.

 

“ஒருவேளை IMF அனுமதி வழங்காவிட்டால், அந்த மேலதிகத் தொகையை (பெட்ரோலுக்கு 20 ரூபா, டீசலுக்கு 100 ரூபா) நுகர்வோர் மீதே சுமத்த வேண்டியிருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருள் விலையைச் சமன்படுத்த அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு சுமார் 2,000 கோடி (20 பில்லியன்) ரூபாவை செலவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

முழுமையான இறக்குமதிச் செலவை அரசாங்கமே ஏற்கும் பட்சத்தில், ஆண்டுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகச் செலவு ஏற்படும், இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

 

சமீபத்திய விலை அதிகரிப்பு:

கடந்த 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளன:

92 ரக பெட்ரோல்: 75 ரூபாவால் அதிகரித்து 375 ரூபாய்

95 ரக பெட்ரோல்: 95 ரூபாவால் அதிகரித்து 450 ரூபாய்

ஒட்டோ டீசல்: 75 ரூபாவால் அதிகரித்து 350 ரூபாய்

சூப்பர் டீசல்: 80 ரூபாவால் அதிகரித்து 420 ரூபாய்

 

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், இது குறித்த இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button