
வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான மிகமுக்கிய காரணம் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோய் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகசந்திப்பை நடத்திய யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் நீரிழிவு நோய் தொடர்பாக மருத்துவ நிபுணர் எம்.அரவிந்தன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நீரிழிவு நோய் தொடர்பான ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்





