இலங்கைதமிழீழம்

மன்னார் மருதமடு திருத்தலத்தின் ஆடி திருவிழா;அலைமோதிய பக்தர்கள்

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்,   மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார்  ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம்  கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியவில்  மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் திருச்செபமாலைகள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இடம் பெற்றது. மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கான நற்கருணை ஆராதனை நேற்று (1)  புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

இன்றைய தினம் குறித்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மற்றும் நாட்டின் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button