
நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளது.
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்னவின் கையொப்பத்துடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எவ்விதத்திலும் தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை என்பதே ‘சர்வஜன அதிகாரத்தின்’ நிலைப்பாடு எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





