
நாடளாவிய ரீதியில் அனைத்து கரைவலை கடற்றொழிலாளர்களும் இன்று முதல் தமது தொழிலிலிருந்து விலகிச் செயற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பு தெரிவித்துள்ளது
.இந்தநிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கடற்றொழிலாளர்களினால் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமது போராட்டத்துக்கான தீர்வு பெற்றுத்தரப்படாத நிலையில் கடற்றொழிலாளர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
கரைவலை கடற்றொழிலாளர்கள் கடந்த 05ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





