
தனது ஆட்சியை அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொடர்வதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசமசிங்கவைகைது செய்ததாக பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நோக்கம் தற்போது தன்னை பலப்படுத்தி அடுத்த ஐந்து வருடங்களுக்கு தனது ஆட்சியை நீட்டிப்பதுதான்.
அதற்கான தயார்ப்படுத்தலில் முக்கியமான விடயம் எதிர்தரப்பில் தம்மை விட பலமானவர்களின் மீது அவர் கை வைக்க வேண்டும் என்பதற்காக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசியல், ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கை, எதிர்கட்சிகளின் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை மாற்றும் என அவர் தெரிவித்தார்





