இலங்கை

இன்று கொழும்பில் பதற்றம், அனைத்து பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்.

இன்று இலங்கை தலைநகர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினுடைய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் மற்றும் மற்றொரு மாணவர் ஒருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒரே நேரத்தில் இரு நீர்த்தாரை வாகனங்கள் மூலம் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமான பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர் லிப்டன் சுற்றுவட்டத்தில் குவிக்கப்பட்டதாக களத்தில் இருந்த எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button